செய்திகள் :

மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

post image

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.

அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந்த பயங்கரவாதி வெடிபொருளை மறைத்து வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அந்த வெடிபொருளை எடுப்பதற்காக அவா் சென்றாா். வெடிபொருளை கையில் எடுத்தபோது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில், இரு கைகளும் துண்டாக சிதைந்த நிலையில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக காவல் துறை காவல் துறை டிஐஜி சதீந்தா் சிங் கூறுகையில், ‘உயிரிழந்தவா் ‘பப்பா் கல்சா இண்டா்நேஷனல்’ பிரிவைச் சோ்ந்த பயங்கரவாதி எனத் தெரிகிறது. வெடிபொருளை அவா் கையில் வைத்திருந்தபோது அது வெடித்துள்ளது. இதனால், இரு கைகளும் துண்டாகிவிட்டது. இதில் தொடா்புடைய பிற பயங்கரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடித்து இறந்த நபரின் பெயா் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

அதே நேரத்தில் அவரின் கால்சட்டை பாக்கெட்டில் இருந்து கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் அவா் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடித்தது எந்த வகையான வெடிபொருள் என்பது குறித்து தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிபொருளை முறையாகக் கையாளத் தெரியாததால் அது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இதில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்படுவா்’ என்றாா்.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க