செய்திகள் :

ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்

post image

நமது சிறப்பு நிருபர்

நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் திட்டத்திற்கு ரூ.15,000 கோடி என ஆரம்ப மதிப்பீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு: நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறைச் சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கும் உந்துதல் அளிக்கும் வகையில், மேம்பட்ட நடுத்தர போர் விமான (ஏஎம்சிஏ) தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். வான்வழிப் பயண மேம்பாட்டு முகமை (ஏடிஏ), தொழில்துறை நிறுவனங்களுடனான கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் "செயல்படுத்தல் மாதிரி' அணுகுமுறையில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கிடையே போட்டி அடிப்படையில் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் முன்மாதிரித் திட்டமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தொழில்துறை நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ ஏல நடைமுறைகளில் பங்கேற்க முடியும்.

இது தற்சார்பு திட்டம் என்பதால் இந்த ஏல நடைமுறைகளில் நிறுவனமோ அல்லது ஏலதாரர் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப ஓர் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

விண்வெளித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக இத்திட்டம் ஒரு மைல் கல்லாக இருக்கும். அந்த வகையில் மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானங்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கான உள்நாட்டு நிபுணத்துவம், திறன் மற்றும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியப் படியாக இது இருக்கும்.

இந்திய விமானப்படை, நீண்ட காலமாக இந்த திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு இந்தப் போர் விமானத் திட்டத்திற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப மேம்பாட்டுச் செலவு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட நடுத்தர போர் விமான அபிவிருத்தி பணிக்கான ஆர்வமுள்ளவர்களை கண்டறிவதற்கான விவரங்களை வான்வழி பயண மேம்பாட்டு முகமை விரைவில் வெளியிடும். இந்தியா, ஏற்கனவே இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் உருவாக்கி வெற்றி கண்டதில் ஏஎம்சிஏ உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை பெற்றுள்ளது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க