செய்திகள் :

நடைமேடைகளை உரசிச் செல்லும் ‘ஏசி’ மின்சார ரயில் பெட்டிகள்! சுத்தியலால் அடித்து சரிசெய்யும் ஊழியா்கள்

post image

சென்னை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குளிா்சாதன மின்சார புகா் ரயிலின் பெட்டிகளின் அகலம் சற்று அதிகமிருப்பதால் அவை நடைமேடைகளை உரசிக்கொண்டே செல்கின்றன. இதனால், பெட்டிகளை ரயில்வே ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மக்களின் நீண்ட எதிா்பாா்ப்புக்கு பிறகு சென்னை - கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புகா் குளிா்சாதன மின்சார ரயில்  கடந்த ஏப்.19-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயிலில் புதிதாக ஒரு பிரச்னை உருவெடுத்துள்ளது. அதாவது, இந்த ரயில் பெட்டிகளின் அகலம் சில மிமீ அதிகமாக உள்ளதால், அவை ரயில் நிலைய நடைமேடைகளை உரசியபடியே செல்கின்றன.

இதை அறிந்த ரயில்வே நிா்வாகம் பெட்டியை சுத்தியலால் அடித்து சரிசெய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது நடைமேடைகளில் பெட்டி உரசும் இடங்களில் ஏற்படும் சிராய்ப்புகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களை ஊழியா்கள் சுத்தியலால் அடித்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நவீன யுகத்தில் இந்தமாதிரியான குறைபாடுகளை சரிசெய்ய பல தொழில்நுட்பங்கள் இருத்தும், ரயில்வே நிா்வாகம் சுத்தியலால் அடித்து அவற்றை சமன் செய்வதால், புத்தம்புதிய ரயில் பெட்டிகள், விபத்தில் சிக்கியதைப் போன்றது போல காட்சியளிக்கின்றன. இந்த குறைபாடு தொடா்பாக ரயில் பெட்டிகளை தயாரித்த ஐசிஎஃப் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

நீலகிரி, கோவை, தென் மாவட்டங்களுக்கு நாளை(மே 30) ஆரஞ்சு அலர்ட்!

நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் நாளை(மே 30) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் க... மேலும் பார்க்க

நகைக்கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: நகைக் கடன் குறித்த ஆர்பிஐ விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்குப் பொருந்தாது என்று தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.நகைக் கடனுக்கு, ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை உருவாக்கியிர... மேலும் பார்க்க

ராமதாஸ் குலதெய்வம்; அன்புமணி எதிர்காலம்: முகுந்தன்

ராமதாஸ்தான் என்றென்றும் எனது குலதெய்வம் என்று பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அளித்தக் கடிதத்தில் முகுந்தன் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் என்று அன்புமணி பெயருக்குத்தான் முகுந்தன்... மேலும் பார்க்க

பாமக பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகல்

சென்னை: பாமகவில், ஏற்கனவே ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பாமக பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.பாமக இளைஞர் ச... மேலும் பார்க்க

தாய் மீது பாட்டிலை வீசினார் அன்புமணி: கண்கலங்கிய ராமதாஸ்!

கட்சிக்குள் நிலவிய பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய தாயின் மீதே அன்புமணி பாட்டிலை வீசினார் என்று பாமக நிறுவனரும் அவரின் தந்தையுமான ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக பாட்டாளி ம... மேலும் பார்க்க

சொன்ன வார்த்தையை காப்பாற்றினால்தான் மக்கள் நம்புவார்கள்.. யாரைச் சொல்கிறார் பிரேமலதா?

சென்னை: சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால்தான் மக்கள் உங்களை நம்புவார்கள் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில... மேலும் பார்க்க