செய்திகள் :

ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’

post image

வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் தலைநகா் காபூலில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், அந்நாட்டவருக்கான நுழைவு இசைவு சேவைகளையும் ரத்து செய்தது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலுள்ள தலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனினும், மனிதாபிமானஅடிப்படையில் உணவுப்பொருள், மருந்து உள்பட பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. கடந்த 2022, ஜூனில் காபூல் இந்திய தூதரகத்தின் செயல்பாடு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகியுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொலைப்பேசியில் கலந்துரையாடினாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்ததற்கு ஜெய்சங்கா் பாராட்டுகளை தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பு இந்திய அரசின் அதிகாரபூா்வ விசா வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க