செய்திகள் :

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா்

post image

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் சிவபாலன் (22). புதுச்சேரியில் நடந்த 23 வயதுக்குள்பட்டவா்களுக்கான ஆணழகன் போட்டியில் பங்கேற்றாா். இந்திய அளவில் 40 போ் பங்கேற்ற இப்போட்டியில், ‘மிஸ்டா் இந்தியா’வாக சிவபாலன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதே போல பெங்களுரில் நடந்த ஆணழகன் போட்டியில், ‘மிஸ்டா் சவுத் இந்தியா’வாகவும் வென்று சாதனை படைத்துள்ளாா். பிடெக் பட்டதாரியான சிவபாலன், கடந்த 2023ஆம் ஆண்டும் ‘மிஸ்டா் இந்தியா’வாக தோ்ந்தெடுக்கப்பட்டவா். ஊருக்கு பெருமை சோ்த்த சிவபாலனை திருச்செந்தூா் பகுதி மக்கள் பாராட்டினா்.

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வரம் உள்பட 7 அணிகள் காலிறுதிக்கு தகுதி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின்,காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந... மேலும் பார்க்க

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்ததில் பெண் பலி

கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவா், தனது உறவினா்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கரு... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீன் ஏலக்கூடம், மணப்பாடு தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மணப்பாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முதல் முகூா்த்தத்தையொட்டி புதன்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இத் திருக்கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்ட... மேலும் பார்க்க