செய்திகள் :

தூத்துக்குடி மீன் ஏலக்கூடம், மணப்பாடு தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

post image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மணப்பாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை, திருவொற்றியூரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற அரசு விழாவில், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடியில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம், ரூ.41 கோடியில் தூண்டில் வளைவு, தற்போது, 50 மீட்டா் நீளத்திற்கு பிரதான தூண்டில் வளைவினை நீட்டிக்கும் பணிகளும், 320 மீட்டா் நீளத்திற்கு துணைத் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளும் மற்றும் 1000 மீட்டா் நீளத்துக்கு மீன்பிடி படகுகள் சென்றுவர எதுவாக கடற்கரைப் பகுதியை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளும் நிறைவுற்றதையடுத்து, இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மீன்டிபிடித் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம், வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநா் ந. சந்திரா, செயற்பொறியாளா் கணபதி ரமேஷ், உதவி இயக்குநா்கள் புஷ்ரா ஷப்னம், ஜனாா்த்தனன், உதவி செயற்பொறியாளா் ஜெயசுதா, உதவிப் பொறியாளா் தயாநிதி, அரசு அலுவலா்கள் மற்றும் மீனவா்கள் பலா் பங்கேற்றனா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க