இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
'தன்னுடைய வளர்ச்சிக்கு எம்ஜிஆர்தான் காரணம்னு அடிக்கடி சொல்லுவாரு...' - ராஜேஷ் பற்றி PRO கோவிந்தராஜ்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான ராஜேஷ் உடல்நலக் குறைவால் இன்று( மே 29) காலமானார். திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘ஏன் முன்பு மாதிரி நடிப்பதில்லை?’
இந்நிலையில் திரைப்பட மக்கள் தொடர்பாளரும், ராஜேஷின் PRO-வுமான கோவிந்த ராஜிடம் மறைந்த ராஜேஷ் குறித்துப் பேசினோம். “அவருக்கு 75 வயது. மாரடைப்பால் இன்று காலை இறந்து விட்டார். எம்ஜிஆர் தான் அவருக்கு கல்யாணம் செய்து வைத்தார். எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜேஷ் சாரிடம் எம்ஜிஆர் ‘ஏன் முன்பு மாதிரி நடிப்பதில்லை’ என்று கேட்டிருக்கிறார்.
ஞாபகதிற்காகப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வார்!
சாருக்கு பட வாய்ப்புகள் கம்மியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட எம்ஜிஆர் நாளை காலை ஒருவரைச் சந்திக்க சொல்கிறார். அதிலிருந்துதான் ராஜேஷ் சார் அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்கிறார். அதனால் தன்னுடைய வளர்ச்சிக்கு எம்ஜிஆர்தான் காரணம் என்று சொல்வார். 25 வருடங்களாக அவருடன் பணிப்புரிக்கிறேன். உலக சினிமா, குறித்து நிறையப் பேசுவார். எல்லாத் தலைவர்களுடனும் நெருங்கி பழகி இருக்கிறார். அவர்களின் ஞாபகதிற்காகப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வார்.
குறிப்பாக காமராஜர் மறைவிற்கு பிறகு அவருடைய சட்டை ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். ஜோசியம் நிறையப் பார்க்கக்கூடியவர். அதைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். மிகப்பெரிய தலைவர்கள் இறந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி இருந்தது. ஏன் இறந்தார்கள் என்று காரணத்தோடு சொல்வார். ஒரு மனிதனை மதித்துப் பண்பாக பழகக்கூடியவர். யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களை நன்றாக உபசரிப்பார். அவரே பரிமாறுவார். ” என்று நடிகர் ராஜேஷ் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...