நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்றும் நாளையும் இரு நாள்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதாகக் கூறப்படும் நிலையில் அதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்த நிலையில், தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வருகிற ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.