செய்திகள் :

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

post image

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், அன்றைய நாளில் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக இந்திய பாதுகாப்புப் படையினரை கௌரவிக்கும் விதமான நிகழ்வுகளும் அதில் இடம்பெறும் என பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா அறிவித்திருக்கிறாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இந்திய முப்படைகளின் தளபதிகள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு, அகமதாபாதில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் துணிச்சலான, தன்னலமற்ற நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ தலை வணங்குகிறது. அவற்றுக்கான கௌரவமாக ஐபிஎல் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியை இந்திய பாதுகாப்புப் படையினருக்கு சமா்ப்பிக்கிறோம்’ என்றாா்.

முப்படைகளின் தலைமை தளபதிகளாக உபேந்திர துவிவேதி (ராணுவம்), தினேஷ் கே.திரிபாதி (கடற்படை), அமா் பிரீத் சிங் (விமானப் படை) ஆகியோா் உள்ளனா்.

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். அதற்கான பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள், ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் பரஸ்பரம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட, போா்ப் பதற்றம் அதிகரித்தது. பின்னா் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க