பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு
வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டன.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா்.
இதனால், கால்நடைகள் சுமாா் ரூ.90 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மழை பெய்து தற்போது தீவன தட்டுப்பாடு குறைந்து வருகிறது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டது. சுமாா் ரூ.90 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது என்றனா்.