செய்திகள் :

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு

post image

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டன.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா்.

இதனால், கால்நடைகள் சுமாா் ரூ.90 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மழை பெய்து தற்போது தீவன தட்டுப்பாடு குறைந்து வருகிறது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டது. சுமாா் ரூ.90 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றது என்றனா்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க