செய்திகள் :

Jithesh Sharma: 'தினேஷ் கார்த்திக்தான் என்னோட குரு!' - ஆட்டநாயகன் ஜித்தேஷ் சர்மா

post image

'பெங்களூரு வெற்றி!'

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. சேஸிங்கில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா 85 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வென்றுவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

ஜித்தேஷ் சர்மா
ஜித்தேஷ் சர்மா

'தினேஷ் கார்த்திக்தான் குரு!'

ஜித்தேஷ் சர்மா பேசியதாவது, ''என்னுடைய உணர்வுகளை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியவில்லை. சேஸிங்கின் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்தத் தருணத்தில் நிலையாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்தேன். விராட் கோலி அவுட் ஆன போது நின்று ஆடி போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெல்ல வைக்க வேண்டும் என்றே நினைத்தேன்.

என்னுடைய குருவும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக்கும் நான் அப்படித்தான் ஆட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். எந்த சூழலிலிருந்தும் என்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொடுத்திருந்தார். ஹேசல்வுட் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். எங்கள் அணி முழுமையாக தன்னம்பிக்கையோடு இருக்கிறது.

Jithesh Sharma
Jithesh Sharma

எங்கள் அணியில் எல்லாருமே மேட்ச் வின்னர்கள்தான். சில விக்கெட்டுகளை விட்டாலும் எங்களால் நம்பிக்கையோடு ஆடி வெல்ல முடியும். ஆர்சிபி மிகப்பெரிய அணி. இந்த அணியில் விராட் கோலி, புவனேஷ்வர் குமார், க்ருணால் போன்ற வீரர்களுடன் ஒன்றாக ஆடுவது எனக்கு எப்போதுமே சந்தோஷத்தையும் ஆர்வத்தையுமே கொடுக்கிறது.

Jithesh Sharma
Jithesh Sharma

நடப்பு சீசனில் வெளியூரில் ஆடிய எல்லா போட்டிகளையும் வென்றிருக்கிறோம் என பாராட்டுகிறீர்கள். அதற்கான க்ரெடிட்டை ரஜத் பட்டிதருக்குதான் கொடுக்க வேண்டும். இந்தப் போட்டியில் எங்களுக்கு கிடைத்த மொமண்டமை அப்படியே அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.' என்றார்.

Jadeja : 'தோனி என் மேல வச்ச அந்த நம்பிக்கைக்காகதான்..!' - ஜடேஜா எமோஷனல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜா அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் கிரிக்கெட் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். 2023 ஆம் ஆண்டு ந... மேலும் பார்க்க

Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' - ரிஷப் பண்டை விமர்சித்த அஷ்வின்

ஐ.பி.எல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி 27.05.2025 அன்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் சிங் நான் - ... மேலும் பார்க்க

CSK: 'நாங்க எதிர்பார்த்த சீசனா இது அமையல, ஆனா சென்னை ரசிகர்கள்...'- நெகிழ்ச்சியாக பேசிய பதிரனா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் ப... மேலும் பார்க்க

Shreyas Iyer: `கொல்கத்தாவில் ஸ்ரேயஸ் முதுகில் குத்தப்பட்டார்' - முன்னாள் இந்திய வீரர் ஓப்பன் டாக்

ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடல்லாமல், கேப்டன்சியில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறார்.கடந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை உட்பட உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகள் அனைத்தையும... மேலும் பார்க்க

Rishabh Pant : 'ஜித்தேஷை அவுட் ஆக்கிய திக்வேஷ்; பெருந்தன்மை காட்டிய பண்ட்!' - என்ன நடந்தது?

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிர... மேலும் பார்க்க

LSG vs RCB : 'நாங்க வர்றோம்!' - RCB அணியை உச்சத்தில் அமர்த்திய ஜித்தேஷ்

'பெங்களூரு வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்ட... மேலும் பார்க்க