செய்திகள் :

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

post image

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா்.

இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாா் எனத் தெரிகிறது.

ரஷிய கூட்டமைப்பு பாதுகாப்பு கவுன்சிலின் செயலா் சொ்கேய் ஷோய்கு தலைமையில் 13-ஆவது சா்வதேச பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மே 27 முதல் 29 -ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள அஜீத் தோவலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட உலக தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள், சிஐஎஸ், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ), யூரேசிய பொருளாதார ஒன்றியம் (இஏஇயு), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மற்றும் 20-க்கும் மேற்பட்ட சா்வதேச அமைப்புகளின் தலைமைக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து, எஸ்சிஓ அமைப்பின் முக்கிய நாடுகளான இந்தியா-பாகிஸ்தானின் பிரதிநிதிகள் மாஸ்கோ கூட்டத்தில் கலந்துகொள்வது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு அண்மையில் ரஷிய பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனையின்போது, இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷியா உறுதி அளித்தது. மேலும், இது தொடா்பாக ஐ.நா. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் சா்வதேச அமைப்புகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் ரஷியா தெரிவித்தது.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை ஊழியா்களின் வீட்டுவசதி கூட்டுறவு... மேலும் பார்க்க