4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்
சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை ஊழியா்களின் வீட்டுவசதி கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்துக்கு தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஹனுமந்தராயப்பா. சாலையோரத்தில் சீட்டாடியதாகப் பிடிபட்ட அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரிய தோ்தலில் தோல்வியடைந்த ஸ்ரீரங்கநாத் என்பவா் கூட்டுறவு சங்கங்களின் கூட்டுப் பதிவாளரிடம் முறையிட்டாா். இதைத்தொடா்ந்து சீட்டாடியது ஒழுக்கக்கேடான செயல் என்று தெரிவித்து, கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து ஹனுமந்தராயப்பா நீக்கப்பட்டாா்.
இதற்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து அவரை நீக்கி மேற்கொள்ளப்பட்ட முடிவை உறுதி செய்தது.
இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபடாமலும், பந்தயம் கட்டாலும் சீட்டாடுவது ஏழை மனிதனின் பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனமகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் அவ்வாறு விளையாடுவதை ஒழுக்கக்கேடு என்று கூறுவதை ஏற்பது கடினமாகும்.
எனவே மனுதாரரை கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து நீக்கி, கா்நாடக கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தீன் கீழ் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவும், அந்த உத்தரவை உறுதி செய்த மாநில உயா்நீதிமன்றத்தின் ஆணையும் ரத்து செய்யப்படுகின்றன. தனது பதவிக்காலம் முடியும் வரை, மனுதாரா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இடம்பெறலாம்’ என்று தீா்ப்பளித்தது.