செய்திகள் :

கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் போராடி மீட்ட வீரர்கள்

post image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.

காற்றுடன் கூடிய இந்தத் தொடர் மழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் அரசுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழையால் ஆறுகளிலும் நீரோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய கார்
வெள்ளத்தில் சிக்கிய கார்

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் கார் மூலம் ஆற்றைக் கடக்க நேற்றுமுன்தினம் இரவு மூன்று நபர்கள் முயற்சி செய்துள்ளனர்.

பாதி ஆற்றைக் கடக்கையில் காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்துச் செல்லப்பட்டு பாறை ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.

காரில் இருந்து வெளியேறிய‌ மூவரும் காரின் மீது ஏறி நின்று உதவிக்குத் தவித்துள்ளனர்.

உள்ளூர் மக்கள் மூலம் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடிய விடியப் போராடி மூன்று பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், "கூடலூர், ஓவேலி வனச்சரகத்தில் தற்காலிக யானை விரட்டும் காவலராகப் பணியாற்றி வரும் ராஜேஷ், கேரள மாநிலம், மஞ்சேரியைச் சேர்ந்த நண்பர்களான ஹாண்ரோ தாமஸ், அருண் தாமஸ், ஆகியோர் வாகனத்தில் ஓவேலி சென்றுள்ளனர்.‌

வெள்ளத்தில் சிக்கிய கார்
வெள்ளத்தில் சிக்கிய கார்

தடை செய்யப்பட்ட பகுதியில் இரவு 11 மணியளவில் வாகனத்தில் திரிந்த அவர்கள் பாண்டியாற்றை வாகனம் மூலம் கடக்க முயன்ற போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

வெளியேற முடியாமல் தத்தளித்த மூவரும், வாகனத்தின் மீது ஏறி நின்று அலறியபடி உதவி கேட்டுள்ளனர்.

கூடலூர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூஹோப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம... மேலும் பார்க்க

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் - கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில... மேலும் பார்க்க

Kochi Ship Accident: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கரை ஒதுங்கிய கண்டெய்னர்; கடற்படை சொல்வது என்ன?

கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியது. கப்பல் கேப்டன் உள்ப்ப... மேலும் பார்க்க

ஊட்டி: தலையில் முறிந்து விழுந்த மரம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொ... மேலும் பார்க்க

கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரிக்கை

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.... மேலும் பார்க்க

மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்... உயிரிழந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்... மேலும் பார்க்க