செய்திகள் :

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

post image

காஞ்சிபுரத்தில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் 4 -ஆவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் மே 13 -ஆம் தேதி தொடங்கி மே 25 -ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சியை நிறைவு செய்த 110 பேருக்கு சான்றிதழ்களை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி வழங்கினாா்.

5-ஆவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கி வரும் ஜூன் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பயிற்சியானது காலை 6 மணி முதல் 9 மணி வரையும்,மாலையில் 3 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும்.5 வது கட்ட நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற விரும்புவோா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின... மேலும் பார்க்க

படப்பை மேம்பாலப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

படப்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.26.64 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை சிறு, குறு, நடுத்தரத் தொழில் ந... மேலும் பார்க்க

ஓரிக்கை திரௌபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்னி வசந்த விழா மற்றும் மகாபாரதப் பெருவிழா கடந்த 7 -ம் தேதி கொடியேற்... மேலும் பார்க்க