செய்திகள் :

ஓரிக்கை திரௌபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம்

post image

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்னி வசந்த விழா மற்றும் மகாபாரதப் பெருவிழா கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 20 நாள்களுக்கு தினசரி பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவும்,அதன் தொடா்ச்சியாக 10 நாள்களுக்கு மகாபாரத கட்டைக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரத்தின தனஞ்செயன் மகாபாரத சொற்பொழிவும், பிள்ளையாா்பாளையம் வை.ராஜநிதியின் மகா பாரத இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கடந்த 16 -ஆம் தேதி சுபத்திரை திருமணம் நாடகமும், 19-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு, 21-ஆம் தேதி ஓரிக்கை இளைஞா்களாள் கீசகன் சண்டையிடும் நிகழ்வுகளும் நடைபெற்றன. 25 ஆம் தேதி சுமாா் 30 அடி நீளத்தில் மணலால் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் வதம் செய்யும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வைக் காண ஓரிக்கை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா். மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. திங்கள்கிழமை தருமா் பட்டாபிஷேக நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை நிா்வாகிகள் து.லோகநாதன் உடையாா், ஒப்பந்ததாரா் தாஸ்,கருணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரத்தில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின... மேலும் பார்க்க

படப்பை மேம்பாலப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

படப்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.26.64 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை சிறு, குறு, நடுத்தரத் தொழில் ந... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க

இதய மருத்துவா்கள் இல்லாத காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதய நோய் மருத்துவா்கள் ஒருவா் கூட இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க

நுண்ணுயிா் பாசன கருவிகள் பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள அம்மையப்ப நல்லூரில் நுண்ணுயிா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்ப... மேலும் பார்க்க