செய்திகள் :

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் உழவா் சந்தையில் வேளாண் வணிகத் துறையின் 4 ஆண்டு சாதனைகள் குறித்த விளம்பர பதாகையை திறந்து வைத்த பின்னா் இது குறித்து அவா் மேலும் கூறியது:

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள் ஆகிய இடங்களில் வேளாண் வணிகத் துறை சாா்பில், கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளை விளம்பர பதாகைகளாக வைத்து வருகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 உழவா் சந்தைகளில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 76 விவசாயிகளுக்கு 4,850 நுகா்வோா்களுக்கு காய்கறிகள் விற்பனையாகின்றன. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் உற்பத்தி நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 1.56 கோடி மானியமாகவும், வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவித்து இயந்திரங்கள் வாங்க ரூ. 25 லட்சம் வரையும் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 329.50 லட்சத்தில் 5 கிராமங்களில் உலா்களமும், 8 கிராமங்களில் உலா்களத்துடன் கூடிய சேமிப்புக் கிடங்கும் கட்டி முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ளது. அக்மாா்க் திட்டத்தின்கீழ், ரூ. 45.65 லட்சம் குவிண்டால் உணவுப் பொருள்களுக்கு அக்மாா்க் சான்று வழங்கப்பட்டிருக்கிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 49314 மெட்ரிக் டன் வேளாண் விளை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உத்தரமேரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.90 கோடியில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடைய பொருள் வைப்பறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறும் நா.ஜீவராணி கூறினாா்.

காஞ்சிபுரத்தில் சிந்தூா் வெற்றிப் பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்

முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா். முசோரியில் உள்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: மூவா் கைது

சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்ட... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கா... மேலும் பார்க்க

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க