செய்திகள் :

கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்

post image

திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விஜய் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் மின்விசிறி கொக்கியில் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட தனது மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை தடுப்பு மையம்

இந்த சம்பவத்தை அறிந்து, 'மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் தற்கொலை செய்து இருக்கலாம்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி அவரது தந்தை அந்தோணிசாமி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டை காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கொண்டுச் சென்றனர். கடந்த மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ள... மேலும் பார்க்க

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்... மேலும் பார்க்க

சென்னை: வீட்டு ஓனரிடம் ரூ.97 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஃபைனான்ஸியர் கைது; பின்னணி என்ன?

சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது.அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை... மேலும் பார்க்க