செய்திகள் :

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

"ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை, ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை ராணுவ வீரர்கள் இரவு, பகல் என 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எல்லை பகுதியான தாரா வாலி கிராமம் முழுவதும் துப்பாக்கிச் சூடு எதிரொலித்தபோது, ​​10 வயது ஷ்ரவன் சிங் என்ற சிறுவன், இதில் அமைதியாக தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

”வளர்ந்ததும் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புவதாகவும், பெரியவன் ஆனதும் ராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாகவும்” அச்சிறுவன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த ராணுவ வீரர்களின் தாகத்தை ஷ்ரவன் தீர்த்து வைத்ததை அடுத்து ராணுவ உயர் அதிகாரியிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் மம்டோட் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷ்ரவன், தனது கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு தண்ணீர், ஐஸ், தேநீர், பால், லஸ்ஸி போன்றவை கொடுத்து அவர்களின் தாகத்தை தீர்த்துள்ளார்.

சிறுவனின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங், சிறுவன் ஷ்ரவனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சி... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க

"என் குடும்பமே விஷம் குடித்துவிட்டது; நானும்..." - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் விபரீத முடிவு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளூர்வாசி ஒருவர் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் உத்தரகண்ட் நம்பர் பிளேட்டுடன் மற்றொரு க... மேலும் பார்க்க

Coimbatore: `ஆர்ப்பரிக்கும் வெள்ளம்' - கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியின் படங்கள் | Photo Album

கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை... மேலும் பார்க்க

மும்பை கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்தைச் சூழ்ந்த வெள்ள நீர்... `திறந்து ஒரே மாதத்தில் இப்படியா?'

மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் தடம் பூமிக்கு அடியில் ஆரே காலனியில் இருந்து ஒர்லி வரை பயன்பாட்டில் இருக்கிறது. இதில் முதல் பகுதி ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரை மட்டுமே செயல்பா... மேலும் பார்க்க