செய்திகள் :

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

post image

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உட்பட 3 குழந்தைகள் இருக்கின்றன.

குர்னம் சிங் விவசாயம் செய்து வருகிறார். காலையில் தோட்டத்திற்கு சென்றால் மாலையில் தான் வருவார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்னம் சிங் என்பவரை ராஜ்விந்தர் கவுர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக அவர்களுக்குள் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. இது குறித்து குர்னம் சிங்கிற்கு தெரிய வந்தது. உடனே தனது மனைவியிடம் இது குறித்து குர்னம் சிங் பேசிப்பார்த்தார். ஆனால் எதுவும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

இப்பிரச்னை போலீஸ் நிலையத்திற்கும் சென்றது. அங்கேயும் தீர்வு காணமுடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் தனது மனைவியை கிராமத்தினரை அழைத்து அவர்களது முன்னிலையில் தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டார்.

திருமணம் - சித்தரிப்புப் படம்

அதோடு மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பையும் சத்னம் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டார். இது குறித்து குர்னம் சிங் கூறுகையில்,''எனது மனைவி மற்றும் அவரது காதலனால் எனது உயிர் மற்றும் சொத்துக்கு அச்சுறுத்தல் இருந்தது. பல இடங்களில் மனைவியின் காதலன் கணவனை கொலை செய்த சம்பவங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே பயத்தில் எனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்டேன். இப்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். நானும் உயிரோடு இருக்க முடியும்'' என்று தெரிவித்தார். இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் இரண்டு நாளில் மனைவி தனது காதலனை விட்டு விட்டு மீண்டும் கணவன் வீட்டிற்கே வந்துவிட்டார்.

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க

"என் குடும்பமே விஷம் குடித்துவிட்டது; நானும்..." - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் விபரீத முடிவு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளூர்வாசி ஒருவர் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் உத்தரகண்ட் நம்பர் பிளேட்டுடன் மற்றொரு க... மேலும் பார்க்க

Coimbatore: `ஆர்ப்பரிக்கும் வெள்ளம்' - கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியின் படங்கள் | Photo Album

கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை... மேலும் பார்க்க

மும்பை கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்தைச் சூழ்ந்த வெள்ள நீர்... `திறந்து ஒரே மாதத்தில் இப்படியா?'

மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் தடம் பூமிக்கு அடியில் ஆரே காலனியில் இருந்து ஒர்லி வரை பயன்பாட்டில் இருக்கிறது. இதில் முதல் பகுதி ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரை மட்டுமே செயல்பா... மேலும் பார்க்க