செய்திகள் :

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

post image

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

தற்போது மும்பையில் 40 மாடிகள் கொண்ட கட்டடத்தில் 4 மாடிகள் ரூ.639 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. ஒர்லி கடற்கரையையொட்டி நமன் சானா என்ற பெயரில் 40 மாடி கொண்ட சொகுசு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 32வது மாடியில் இருந்து 35வது மாடி வரை நான்கு மாடிகளை தொழிலதிபர் லீனா காந்தி திவாரி என்பவர் வாங்கி இருக்கிறார். இந்த வீடுகள் இரட்டை மாடிகளாகும். இது மொத்தம் 22,572 சதுர அடி பரப்பளவாகும்.

லீனா காந்தி

ரூ.639 கோடி வீடு..!

அரபிக்கடலையொட்டி இருக்கும் இக்கட்டத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த வீடுகளுக்காக தொழிலதிபர் திவாரி மொத்தம் ரூ.703 கோடி செலவு செய்திருக்கிறார். இதில் வீட்டு விலை ரூ.639 கோடியாகும். பதிவு மற்றும் முத்திரை கட்டணம் 63.9 கோடியாகும். ஒரு சதுர அடி 2.83 லட்சம் ரூபாயிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனையான வீடுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டை வாங்கி இருக்கும் லீனா காந்தி திவாரி யு.எஸ்.வி மருந்து கம்பெனியின் தலைவர் ஆவார். இந்த அளவுக்கு அதிக விலையில் வீடுகள் வாங்கியது குறித்து லீனா காந்தி திவாரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பு இதே ஒர்லி பகுதியில் கடற்கரையையொட்டி கோடக் மகேந்திரா வங்கியை சேர்ந்த உதய் கோடக் அடுக்கு மாடி கட்டடத்தில் 8 வீடுகளை ரூ.400 கோடி கொடுத்து வாங்கினார். ஒரு சதுர அடி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையானது. தென்மும்பையில் வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும் தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொடர்ந்து சொத்துகளில் மீது முதலீடு செய்து கொண்டே இருக்கின்றனர். தென்மும்பையில்தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடும் இருக்கிறது.

படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!

2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி ... மேலும் பார்க்க

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சி... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க

"என் குடும்பமே விஷம் குடித்துவிட்டது; நானும்..." - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் விபரீத முடிவு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளூர்வாசி ஒருவர் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் உத்தரகண்ட் நம்பர் பிளேட்டுடன் மற்றொரு க... மேலும் பார்க்க

Coimbatore: `ஆர்ப்பரிக்கும் வெள்ளம்' - கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியின் படங்கள் | Photo Album

கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை... மேலும் பார்க்க