செய்திகள் :

சென்னை: வீட்டு ஓனரிடம் ரூ.97 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஃபைனான்ஸியர் கைது; பின்னணி என்ன?

post image

சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது.

அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கியிருந்தார் ஹேமமாலினி.

பின்னர் பணத்தேவைக்காக அந்தக் குடியிருப்பை ஹேமமாலினி விற்க முடிவு செய்தபோது, அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

கைது
கைது

இதையடுத்து அந்த வீட்டின் விலை 1.6 கோடி ரூபாய் எனப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் ஹேமமாலினி வாங்கிய கடன், அதற்குரிய வட்டி எனக் கணக்கு பார்த்த சுபாஷ் சந்த் ஜெயின், 97 லட்சம் ரூபாயைக் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்வதாக ஹேமமாலினியிடம் உறுதி அளித்திருக்கிறார்.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினின் மனைவி பெயருக்கு ஹேமமாலினி கிரையம் செய்து கொடுத்திருக்கிறார்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி 97 லட்சம் ரூபாயை சுபாஷ் சந்த் ஜெயின், ஹேமமாலினியிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயின்
ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயின்

இதுதொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஹேமமாலினி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அயனாவரத்தைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயினைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர் மீது ஏற்கெனவே சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் கந்துவட்டி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் சந்த் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம்,மாத்தூர்கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67).இவர் திருச்சிராம்ஜிநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "மாத்தூர்கிராமத்தில்ச... மேலும் பார்க்க

மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார்; 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்து 4 பேர் காயம்..

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரான ராஜா என்பவருடன் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ள... மேலும் பார்க்க

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்... மேலும் பார்க்க