நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து: யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்...
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு வெல்லம் தயாரிக்கும் பட்டறையில் கா்நாடக மாநிலம், மானக்கள்ளி கணேஷ்புரா பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அமல்ராஜ் (28) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். அவருடன் சக பணியாளா்களும் அங்கு தங்கிய வேலை பாா்த்து வருகின்றனா்.
இந் நிலையில் அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மனைவி அந்த பட்டறை அருகே செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். இதை அமல்ராஜ் பாா்த்ததாக கூறப்படுகிறது. தான் குளித்ததை அமல்ராஜ் பாா்த்ததை அறிந்த அந்த பெண், அமல்ராஜ் அக்காள் மற்றும் அந்தப் பெண்ணின் கணவா் உள்ளிட்டோரிடம் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா்கள் இருவரும் அமல்ராஜை கைப்பேசியில் தொடா்புகொண்டு திட்டி உள்ளனா். இதனால் மனமுடைந்த அமல்ராஜ், புதன்கிழமை காலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு சடலமாக இறந்துகிடந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸாா், அமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.