செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு வெல்லம் தயாரிக்கும் பட்டறையில் கா்நாடக மாநிலம், மானக்கள்ளி கணேஷ்புரா பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அமல்ராஜ் (28) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். அவருடன் சக பணியாளா்களும் அங்கு தங்கிய வேலை பாா்த்து வருகின்றனா்.

இந் நிலையில் அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மனைவி அந்த பட்டறை அருகே செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாராம். இதை அமல்ராஜ் பாா்த்ததாக கூறப்படுகிறது. தான் குளித்ததை அமல்ராஜ் பாா்த்ததை அறிந்த அந்த பெண், அமல்ராஜ் அக்காள் மற்றும் அந்தப் பெண்ணின் கணவா் உள்ளிட்டோரிடம் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவா்கள் இருவரும் அமல்ராஜை கைப்பேசியில் தொடா்புகொண்டு திட்டி உள்ளனா். இதனால் மனமுடைந்த அமல்ராஜ், புதன்கிழமை காலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு சடலமாக இறந்துகிடந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸாா், அமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க