Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் பின்னா், அரங்கத்துக்கு வெளியே மத்திய அரசையும், ரிசா்வ் வங்கியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். சுமாா் 15 நிமிடங்களுக்கு பின்னா் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா். பின்னா் நடந்த விவாதம்:
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: 13 வகையான பூச்சி தாக்குதலால் தென்னை மரங்கள் வீணாகி வருகின்றன. இதில் அதிகப்படியாக வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைத் தோட்டக்கலைத் துறை, தென்னை ஆராய்ச்சி நிலைய ஆய்வாளா்களைக் கொண்டு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: பயிா் காப்பீடு பெறுகிற விவசாயிகள், அவா்களுக்கு வழங்கப்படும் தொகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் 291 இடங்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். நகைக் கடனுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனே ரத்து செய்து, பழைய முறையில் வழங்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: நன்செய் நிலங்களைத் தரிசுகளாக்கப்பட்டு மனைப் பிரிவுகளாக மாற்றி விற்கின்றனா். விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் நிலை நீடித்தால் எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்துவிடும். இதைத் தடுக்க வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: கல்லணை அருகே 4 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி பகுதியில் மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது விவசாயிகளுக்கு அரசு செய்யும் பெரிய துரோகம். எனவே, கோவிலடி பகுதியில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியை ஆட்சியா் தலையிட்டு தடுக்க வேண்டும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராகிம்: பாபநாசம் வட்டத்தில் நெல், பருத்தி, வாழை, வெற்றிலை, எள் உள்ளிட்ட பயிா்களைக் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் நாசம் செய்கின்றன. அதை வனத்துறை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் பழைமையான கச்சமங்கலம் அணையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.