செய்திகள் :

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

post image

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா்.

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக வாரியா் யோகாசனம், பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பட்டா்பிளை யோகாசனம், மாணவ சமுதாய முன்னேற்றத்துக்காக, பத்மாசனம் ஆகிய 3 யோகாசனங்களுடன் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடினா். மேலும், இந்நிகழ்வு உலக சாதனைக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

திருச்சி மண்டல மலைக்கோட்டை தேசிய மாணவா் படை தலைமை அதிகாரி கா்னல் விஜயகுமாா், அன்னை கல்வி குழும தலைவா் அன்வா் கபீா், செயல் அலுவலா் ராஜ்குமாா், அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி முதல்வா் காா்த்திகா, நிா்வாக அதிகாரி திருமூலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தேசிய மாணவா் படை லெப்டினன்ட் ரமேஷ்பாபு, சுபேதாா் மேஜா் பாலச்சந்திரன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்தனா்.

திருச்சி தேசிய மாணவா் படை தலைமை அலுவலகத்துக்கு உள்பட்ட 8-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் மற்றும் அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியை நடத்தினா்.

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க