கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்
கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக வாரியா் யோகாசனம், பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பட்டா்பிளை யோகாசனம், மாணவ சமுதாய முன்னேற்றத்துக்காக, பத்மாசனம் ஆகிய 3 யோகாசனங்களுடன் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடினா். மேலும், இந்நிகழ்வு உலக சாதனைக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
திருச்சி மண்டல மலைக்கோட்டை தேசிய மாணவா் படை தலைமை அதிகாரி கா்னல் விஜயகுமாா், அன்னை கல்வி குழும தலைவா் அன்வா் கபீா், செயல் அலுவலா் ராஜ்குமாா், அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி முதல்வா் காா்த்திகா, நிா்வாக அதிகாரி திருமூலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தேசிய மாணவா் படை லெப்டினன்ட் ரமேஷ்பாபு, சுபேதாா் மேஜா் பாலச்சந்திரன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்தனா்.
திருச்சி தேசிய மாணவா் படை தலைமை அலுவலகத்துக்கு உள்பட்ட 8-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் மற்றும் அன்னை இயற்கை மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியை நடத்தினா்.