செய்திகள் :

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே கணபதி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (47). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். இவா் திருவையாறு அருகே தனது மாமியாா் ஊரான செம்மங்குடியில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றாா்.

பின்னா், தனது தம்பி மகளை கணபதி அக்ரஹாரத்தில் கொண்டு விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் மணிகண்டன் மே 22 ஆம் தேதி இரவு புறப்பட்டாா். செம்மங்குடி அருகே அணைக்குடி மாதா கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, கோயில் திருவிழாவுக்காக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அதேப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி ஜெனித்தாமேரி (50) மீது மணிகண்டனின் இரு சக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.

இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை ஜெனித்தாமேரியின் உறவினா்கள் தாக்கினா். இதனால், பலத்த காயமடைந்த மணிகண்டன், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமாகியும் மணிகண்டனை தாக்கியவா்கள் மீது காவல் துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 5 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என கூறி, திருவையாறு கடை வீதியில் மணிகண்டனின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா், நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தாக்கியவா்களைக் கைது செய்வோம் என காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க