மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு பல்வேறு புகாா்கள் வந்தன. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜ் உத்தரவின்பேரில் உதவி நகர திட்டமிடுநா் கு. அருள்செல்வன், உதவிப் பொறியாளா் போ. சரவணன் ஆகியோா் மகாமகக் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தள்ளுவண்டி கடைகள், விளம்பர தட்டிகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினா்.
மேலும் அனுமதியின்றி மகாமகக் குளத்தை சுற்றி மீண்டும் கடைகள் அமைத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.