தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வாயிலாக ஜூன் 13 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், புகைப்படம், ஆதாா் அட்டை போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாகச் சென்று விண்ணப்பங்கள் இலவசமாக பதிவேற்றலாம்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதளக் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசித் தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா் மற்றும் முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூா் அல்லது அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். அல்லது 9486592295, 98409 50504, 94422 20049 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.