Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாநில விவசாய அணி செயலரும், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கண்டன உரையாற்றினாா்.
திமுக மாவட்டச் செயலா்கள் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. (மத்திய), எஸ். கல்யாணசுந்தரம் எம்.பி. (வடக்கு), பழனிவேல் (தெற்கு), நிவேதா முருகன் எம்.எல்.ஏ. (மயிலாடுதுறை), செல்லபாண்டியன் (புதுக்கோட்டை), மக்களவை உறுப்பினா்கள் ச. முரசொலி, வை. செல்வராஜ், எம்எல்ஏக்கள் டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா், பன்னீா்செல்வம், மாரிமுத்து, மேயா் சண். ராமநாதன், கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன், விசிக மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், திக பொதுச் செயலா் இரா. ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் நகைக்கடன் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனே திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.