இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
பெண் மீது தாக்குதல்
பெரியகுளம் அருகே தகராறை விலக்கச் சென்ற பெண்ணை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (35). இவருக்கும், இவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அருகிலிருந்த செல்வி (45), இருவரையும் விலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த முத்துச்சாமி, செல்வியை தாக்கினாராம். இதில் காயமடைந்த செல்வியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.