செய்திகள் :

Digvesh Rathi : 'திக்வேஷ் ரதி செய்ததில் எந்தத் தவறும் இல்லை!' - ஏன் தெரியுமா?

post image

பெங்களூருவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஜித்தேஷ் சர்மாவை லக்னோவின் திக்வேஷ் ரதி நான் - ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியிருந்தார். ஆனால், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இடையில் புகுந்து அந்த அவுட்டை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

'திக்வேஷ் மீது விமர்சனம்!'

Digvesh Rathi
Digvesh Rathi

இந்நிலையில், நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் செய்ய முயன்ற திக்வேஷ் ரதியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அந்த விமர்சனங்களில் நியாயமில்லை என்பதே உண்மை.

'விதிமுறைகள் சொல்வதென்ன?'

திக்வேஷ் ரதி இப்படி செய்யலாமா? இப்படி செய்துதான் ஒரு விக்கெட்டை எடுக்க வேண்டுமா? ஒரு போட்டியை வெல்ல வேண்டுமா? என நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையை எதோ ஏமாற்று வேலை போல விமர்சனம் செய்து வருகின்றனர். நியாயப்படி பார்த்தால் இந்த விமர்சனமெல்லாம் ஜித்தேஷ் சர்மா மீதுதான் எழுந்திருக்க வேண்டும்.

Digvesh Rathi
Digvesh Rathi

பௌலர் பந்தை ரிலீஸ் செய்யும் வரை நான் - ஸ்ட்ரைக்கர் க்ரீஸிலிருந்து வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் பௌலர் அவரை ரன் அவுட் செய்யலாம். இதுதான் விதிமுறை. விதிமுறையை மீறியது திக்வேஷ் அல்ல, ஜித்தேஷ்தான். ஆக, இங்கே விமர்சிப்பதென்றால் ஜித்தேஷைத்தான் விமர்சிக்க வேண்டும்.

முன்னாள் வீரர்களின் கருத்து!

'கிரிக்கெட் ஜெண்டில் மேன் ஆட்டம் என்பதிலிருந்து நகர்ந்துவிட்டது. ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு வென்றுவிட வேண்டும் என்பதுதான் இப்போதைய மனநிலை. திக்வேஷ் ரதி செய்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர் விதிகளுக்கு உட்பட்டுதான் இதை செய்திருக்கிறார். ஆனால், ரிஷப் பண்ட் அதை அவுட் கொடுக்க வேண்டாம், நாங்கள் அப்பீல் செய்யவில்லை எனக் கூறியது பெருந்தன்மை.

ஆனால், அதே ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் வென்றால் ப்ளே ஆப்ஸ் செல்ல முடியும் என்ற சூழல் இருந்திருந்தால் அப்படி பெருந்தன்மையாக நடந்துகொண்டிருப்பாரா?' என இந்த சம்பவம் பற்றி ராபின் உத்தப்பா பேசியிருந்தார்.

Rishabh Pant
Rishabh Pant

'அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் ரிஷப் பண்ட் செய்தத்தைத்தான் செய்திருப்பேன். ஆனால், இங்கே பௌலரின் மீதும் எந்தத் தவறும் இல்லை. அவர் விதிகளுக்கு உட்பட்டுதான் இதையெல்லாம் செய்திருக்கிறார்.' என மைக்கேல் க்ளார்க் பேசியிருக்கிறார்.

ஆம், பண்ட் செய்தது பெருந்தன்மைதான். ஆனால் அதற்காக திக்வேஷ் ரதி செய்தது எந்த விதத்திலும் தவறான செயல் இல்லை.

Ashwin : 'அழுதுகொண்டே மூலையில் அமர்ந்துவிட மாட்டேன்!' - ரசிகரின் கோபத்துக்கு அஷ்வின் பதில்

'அஷ்வின் மீது விமர்சனம்!'நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடியிருந்தது. புள்ளிப்பட்டியலில் 10 வது இடம்பிடித்து லீக் சுற்றோடு தொடரை விட்டும் வெளியேறியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏலத்தில... மேலும் பார்க்க

Rishabh Pant : 'அவ்ளோ சீக்கிரம் ஓஞ்சிட மாட்டேன்!' - பண்ட்டின் சதமும் முக்கியத்துவமும்!

'பெங்களூரு vs லக்னோ!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டாப் 2 கனவுக்கு பெருத்த சவாலை கொடுத்திருக்கிறார் ரிஷப் பண்ட். ஏக்னா மைதானத்தில் நடந்து வரும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக ஆடி சத... மேலும் பார்க்க

காதல் மன்னனின் திக் திக் தருணம்! - கார் பந்தயத்தை நேரில் பார்க்க குவியும் ரசிகர்கள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Kush Maini: `ரேஸ் குடும்பம் டு F2 ரேஸில் வென்ற முதல் இந்தியர்' - யார் இந்த குஷ் மைனி?

இந்தியாவைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர் குஷ் மைனி, கடந்த சனிக்கிழமையன்று மொனாக்கோவில் நடைபெற்ற ஃபார்முலா 2 (F2) ரேஸில் ஸ்பிரின்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்குப் பெருமை ... மேலும் பார்க்க