செய்திகள் :

5,000 ஆண்டுகள் பழைமையான ’கதலி பழம்’... இன்று வாழைப்பழமாக மாறியது எப்படி?

post image

இன்று வாழைப்பழமாக அறியப்படும் பழ வகை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தில் ”கதலி பழம்” என்று அழைக்கப்பட்டது தற்போது வாழைப்பழமாக உருவெடுத்துள்ளது. இதன் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்று இந்தியா வாழை சாகுபடிக்கு சரியான இடமாக மாறி உள்ளது. வாழைப்பழங்கள் இப்போது உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், இந்தியாவில் அதன் பங்கு வேரூன்றி உள்ளது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் எல்லைகளுக்கு வாழைப்பழங்களை பிரபலப்படுத்தியதில் அலெக்சாண்டருக்கு ஒரு பங்கு இருந்ததாக தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் தனது பிரச்சாரத்தின் போது, ​​அலெக்சாண்டர் இந்த பழத்தைக் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு இருக்கும் அரபு வணிகர்கள் அதனை வாழைப்பழம் என்று அழைத்ததாகவும் TOIயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து, வாழைப்பழங்கள் 15 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருக்கின்றன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், வாழைப்பழங்கள் ஐரோப்பாவை அடைந்தன, அங்கு அவை ஒரு ஆடம்பர பழமாகக் கருதப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்பட்டன.

1835 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஒரு தோட்டக்காரரான ஜோசப் பாக்ஸ்டன், தனது முதலாளி வில்லியம் கேவென்டிஷின் நினைவாக மூசா கேவென்டிஷ் என்ற புதிய மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழத்தை பயிரிட்டார். இன்று, கேவென்டிஷ் வகை உலகளவில் மிகவும் பொதுவான வாழைப்பழமாக அறியப்படுகிறது, இது தினசரி சாப்பிடும் பழமாக மாறியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் வாழைப்பழங்கள்

இந்திய வரலாற்றில் வாழைப்பழங்கள் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளன. முக்கனிகளான மா, பலா, வாழை இவை மூன்றும்...மத சடங்குகளில் தொடங்கி பாரம்பரிய மருத்துவம் வரை இடம்பெறுகிறது.

இந்தியாவில் தனித்துவமான வாழைகள்

இந்தியாவில் பல்வேறு வகையான வாழை மரங்களும், வாழை பழங்களும் உள்ளன. இவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு உணவாக பயன்படும் இனிப்பு மற்றும் மொரு மொருப்பான சிப்ஸ்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தென்னிந்தியாவில் இன்றும் சுப காரியங்களின் போது வாழை இலையை உணவுக்காக பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு வாழையை இந்திய மக்கள் கருதுகின்றனர்

என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி: தொடர் மழையால் சங்குதுறை கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகள்! | Photo Album

கன்னியாகுமரி: கோடை மழை பெய்தும் நிரம்பாத முக்கடல் அணை; தற்போதைய நிலை என்ன? | Photo AlbumJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BI... மேலும் பார்க்க

குற்றாலம்: தொடரும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க 4வது நாளாகத் தடை; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாகத் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் கொடுத்திருக்கிறது.கடந்த 3 நாட்களாக வானம் ... மேலும் பார்க்க

16 வருடங்களுக்குப் பின் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்த `மே மாத' வெள்ளம்! - Photo Clicks

நொய்யல் ஆற்றில் வெள்ளம்சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு நொய்யல் ஆற்றில் வெள்ளம்நொய்யல் ஆற்றில் வெள்ளம்சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு ச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மும்பை உட்பட மாநிலம் முழுவதும் கனமழை... வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த வாரமே மழை தொடங்கி விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி இன்றும... மேலும் பார்க்க

கோவை: மீட்பு... சிகிச்சை... உயிரிழப்பு - வயிற்றில் குட்டியுடன் இறந்த தாய் யானையின் கடைசி நிமிடங்கள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை அருகே மூன்று வயது குட்டியானை உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை அருகே மூன்று வயது குட்டியானை உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைஉடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைஉடல் நலம... மேலும் பார்க்க