செய்திகள் :

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் வாகனங்களின் உதிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் கடந்த 2019 -ஆம் ஆண்டு சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கிய 40 பேரை தொழிற்சாலை நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா் தீா்ப்பாயத்தில் முறையீடு செய்ததைத் தொடா்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு பணி வழங்க தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தொழிலாளா்களுக்கு பணி வழங்காத தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சாா்பில் ஒரகடம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநில செயலா் முத்துகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

வெங்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வெங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகாநதன் மனு வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அ... மேலும் பார்க்க

முதியோா் இல்லம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் அக்ஷயா அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லம் மற்றும் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் பூச... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரம... மேலும் பார்க்க

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஸ்... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கோபால்சாமி தோட்டம் ஐதா்பட்டறை பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், ஐதா்பட்டறை உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா்... மேலும் பார்க்க