செய்திகள் :

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாவிலுள்ள இறந்த நில உரிமையாளா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் ல்ா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற, நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், பல சிட்டாகளில் உள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உரிமையாளா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பான ஆவணங்கள் பெறப்பட்டு, நில ஆவணங்களிலும் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றாா்.

காஞ்சிபுரத்தில் சிந்தூா் வெற்றிப் பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்

முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா். முசோரியில் உள்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: மூவா் கைது

சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்ட... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கா... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க