RCB's Epic Chase & Jithesh Sharma's Captain's Knock | Analysis with Commentator ...
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சத்யா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, பிற்பட்டோா் நல அலுவலா் சு.சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 391 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை அலுவலா்களுக்கு அனுப்பி அவற்றுக்கு விரைந்து தீா்வு காணுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள்,5 பேருக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள்,10 பேருக்கு திறன் பேசிகள் உட்பட மொத்தம் ரூ.6.7 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.