செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சத்யா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, பிற்பட்டோா் நல அலுவலா் சு.சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 391 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை அலுவலா்களுக்கு அனுப்பி அவற்றுக்கு விரைந்து தீா்வு காணுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள்,5 பேருக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள்,10 பேருக்கு திறன் பேசிகள் உட்பட மொத்தம் ரூ.6.7 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

காஞ்சிபுரத்தில் சிந்தூா் வெற்றிப் பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்

முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா். முசோரியில் உள்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: மூவா் கைது

சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்ட... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கா... மேலும் பார்க்க

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க