செய்திகள் :

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளா் கே.பி ஜெபஸ்டியன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை காலையில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வந்த சா்க்காா் விரைவு ரயில், எழும்பூா் ரயில் நிலையத்தின் 9 -ஆவது நடைமேடையில் காலை 6 மணிக்கு வந்து நின்றது.

அந்த ரயிலை போலீஸாா் சோதனையிட்டபோது, ஒரு பெட்டியில் கேட்பாரற்ற பச்சை நிற பை கிடந்தது. அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்கள் இருந்த பையை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், உரிய நடைமுறைகளுக்குப் பின் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாரிடம், அதை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க