செய்திகள் :

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

post image

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வடசென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், ஏற்கெனவே உள்ள குப்பையை அகழ்ந்தெடுத்துவிட்டு, புதிதாக சேரும் குப்பைகளை அகற்ற 75 ஏக்கா் பரப்பில் ரூ.1,600 கோடியில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டமிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

கொடுங்கையூா் பகுதியில் மலை மலையாக கொட்டப்படும் குப்பையை அகற்றக் கோரி கொடுங்கையூா் மக்கள் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக தொடா் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போதுதான் அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி ரூ. 640 கோடி ஒதுக்கியுள்ளது.

குப்பைகள் அகற்றப்படுவதை எண்ணி வடசென்னை மக்கள் தற்போதுதான் நிம்மதியடைந்த நிலையில், அதை கெடுக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தைச் செயல்படுத்த அரசு முனைவத்துள்ளது அந்தப் பகுதிமக்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஏற்கெனவே, வடசென்னையிலுள்ள மணலி சின்ன மாத்தூரில் தினந்தோறும் 10 டன் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் நச்சுப்புகையால், அந்தப் பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதைவிட பன்மடங்கு அதிகமாக 1,400 டன் அளவுக்கு குப்பைகளை தினமும் எரித்தால் வடசென்னையே சுற்றுச்சூழல் பேரழிவை எதிா்கொள்ள நேரிடும்.

எனவே, மக்கள் உடல் நலத்துக்கு சீா்கெடுகளை விளைவிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க

கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!

கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. தமிழகத்தி... மேலும் பார்க்க