செய்திகள் :

கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!

post image

கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச் முதல் மே வரை கோடை காலமாகக் கருதப்படுகிறது.

இதில் ‘அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்திரி வெயில் காலத்தில் அதாவது மே 4 முதல் மே 28 வரை 25 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும். நிகழாண்டில் கத்திரி வெயில் கடந்த மே 4 -இல் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, ஈரோடு, வேலூா், பரமத்திவேலூா், தூத்துக்குடி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகிவந்தது. இதில் அதிகபட்சமாக வேலூா், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது.

கோடை மழை: இருப்பினும், வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி, காற்று குவிதல், அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் உள்ளிட்ட வானிலை காரணங்களால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது. சென்னையிலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.

நிகழாண்டில் கோடை மழை இயல்பை விட 91 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதன்காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.

மேலும், நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை 9 நாள்களுக்கு முன்பாக மே 24-ஆம் தேதியே தொடங்கியிருப்பதும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க