செய்திகள் :

தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!

post image

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில், நள்ளிரவில், சாலையில் எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பலியானார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நள்ளிரவில், காலியாக இருந்த சாலையில் இப்படியொரு விபத்து நடந்திருப்பது விடியோ காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பின்னந்தலையில் அடிபட்டு பலியானார். மதுபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டை நரசிம்மன் சாலை பகுதியில் நேற்று இரவு 12 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பைக் மெக்கானிக்கான தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அழகேசன் (24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

சரவணன் (36) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அழகேசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டதில் ஹெல்மெட் அணியாமல் இருந்த அழகேசன் என்பவருக்கு பின்னந்தலையில் பலமாக அடிபட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், மது போதையில் சரவணன் இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சரவணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியு... மேலும் பார்க்க

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க