செய்திகள் :

பாகிஸ்தானில் இருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்வதை அனுமதிக்க முடியாது: சசி தரூர்

post image

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கும் யாரும் இந்திய குடிமக்களைக் கொன்றுவிட்டு தண்டனையின்றி தப்பிப்பதை அனுமதிக்க முடியாது என்ற புதிய நடைமுறை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்க்கும் நோக்கில் இந்தியாவின் முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டன. இது குறித்து பல்வேறு வெளிநாடுகளுக்கு எடுத்துக் கூறும் நோக்கில் 7 எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன. அவற்றில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய}அமெரிக்கர்கள், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை இக்குழுவினர் சந்தித்துப் பேச இந்தியத் தூதரகம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்தச் சந்திப்பில் பங்கேற்றவர்களிடையே சசி தரூர் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கும் யாரும் இந்திய குடிமக்களைக் கொன்றுவிட்டு தண்டனையின்றி தப்பிப்பதை அனுமதிக்க முடியாது என்ற புதிய நடைமுறை தொடங்கியுள்ளது. இந்தியாவில் யாரும் தாக்குதல் நடத்தினால் அதற்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிவரும்.

நாங்கள் எதையும் தொடங்க விரும்பவில்லை என்பதே பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த தெளிவான செய்தியாகும். நாங்கள் பயங்கரவாதிகளுக்கு செய்தியை அனுப்புகிறோம்} "நீங்கள் (தாக்குதலை) ஆரம்பித்தீர்கள்; நாங்கள் பதிலடி கொடுத்தோம். நீங்கள் நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்'. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 88 மணி நேரத்துக்கு போர் நடைபெற்றது.

சில ஆண்டுகளாக எங்களது கவனமானது உலகின் வேகமாக வளரும் தாராள சந்தைகளைக் கொண்ட ஜனநாயக நாடுகள் மீது உள்ளது. எங்கள் பொருளாதாரத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏராளமானோரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்கவும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று சசி தரூர் பேசினார்.

இரட்டை கோபுர நினைவிடத்தில் அஞ்சலி: சசி தரூர் தலைமையிலான குழுவினர் நியூயார்க் நகரில் கடந்த 2001}ஆம் ஆண்டு செப்டம்பர் 11}ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இரட்டை கோபுர கட்டட நினைவிடத்துக்குச் சென்றனர். இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அமெரிக்காவைப் போலன்றி இந்தியா பெரும் எண்ணிக்கையிலான பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டது.

பயங்கரவாதம் என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பிரச்னை என்பதை நினைவுபடுத்தவும் நியூயார்க் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னையாகும்.

நாம் அதை ஒற்றுமையுடன் எதிர்த்துப் போராட வேண்டும். இதுவே உலகுக்கு இந்தியாவின் முக்கியமான செய்தியாகும்' என்றார்.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க