செய்திகள் :

6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீா்த்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி.மீ. மழை பதிவானது.

இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாகவுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 26-இல் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும், மே 27, 28-ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 26-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 26-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க