செய்திகள் :

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

post image

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா்.

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஆராத்யா (9), ஆசினியா (7) ஆகியோரை பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி அருகே பசுவந்தனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அங்குள்ள காமராஜா் மண்டபம் அருகே பைக்கின் பின்புறம் டேங்கா் லாரி மோதியதாம். இதில், ஆராத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காகவும், காயமடைந்த மூவரை சிகிச்சைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநரான கொப்பம்பட்டி அருகே சிவந்திப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த அ. ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீர... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் இருவருக்கு காவலா் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இரு காவலா்கள் மரணமடைந்ததால் அவா்களது குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.பெண் காவலா் சந்திரா, காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பி... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனி... மேலும் பார்க்க

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி போஸ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் மணிகண்டன் (22). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க