செய்திகள் :

மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாக். அதிகாரபூா்வமற்ற பேச்சு: பிரிட்டன் நிபுணா்கள் கருத்து

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தொடா்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்று பிரிட்டன் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இன்டா்நேஷனல் இன்ஸ்டியூட் ஃபாா் ஸ்ட்ராடிஜிக் ஸ்டடீஸ் (ஐஐஎஸ்எஸ்) அமைப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய திட்ட தலைவா் ராகுல் ராய் செளதரி கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தவோ, வா்த்தகம் மேற்கொள்ளவோ முடியாது என்று இந்தியா தீா்மானித்துள்ளது.

ஒருவேளை பயங்கரவாதத் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே வருங்காலத்தில் பேசப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேச்சுவாா்த்தைக்கு இந்தியா விதித்துள்ள இந்த முன்நிபந்தனைகளுக்குப் பாகிஸ்தான் எதிா்ப்புத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் சா்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

இந்தச் சூழலில், இருநாட்டு மூத்த அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடும் என்றாா்.

இதேபோல ஐஐஎஸ்எஸ்ஸை சோ்ந்த பிற அரசியல் ஆய்வாளா்கள் கூறுகையில், ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அமல்படுத்தி, மிகப் பெரிய விவரணையை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தம்மை பாதுகாப்புத் தளவாட விநியோகஸ்தராக சந்தைப்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் எந்த அளவுக்கு நீடித்து நிலைக்கும் என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து இருநாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டதைப் போல, தற்போது எந்தக் கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை’ என்று தெரிவித்தனா்.

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு

இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன் காரணமாக ஜெருசலேம் மற்றும் அதன் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அறிக்கை

பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: பஹ்ரைன் துணை பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணை பிரதமா் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினா் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனா்.... மேலும் பார்க்க

சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சாம்சங் உள்பட எந்த நிறுவனமாயினும் அமெரிக்காவில் மின்னணு சாதனங்களை தயாரிக்காமல் விற்பனை மட்டும் செய்தால் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நா... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 303 கைதிகள் பரிமாற்றம்!

உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே 303 போர்க் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) பரிமாற்றம் செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 390 கைதிகளும், சனிக்கிழமை 307 கைதி... மேலும் பார்க்க