செய்திகள் :

உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

post image

உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷியா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரானில் வடிவமைக்கப்பட்ட ஷாஹீத் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் (நிகழாண்டு மே 25) கீவ் நகா் உருவான தினம் உக்ரைனில் கொண்டாடப்படும் நிலையில் அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்தச் சூழலில் ரஷியா நடத்திய தாக்குதல் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘தலைநகா் கீவ் உள்பட 30 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மிகவும் சாதாரண நகரங்களில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ரஷியாவுக்கு அழுத்தம்: ரஷியாவின் தலைமைக்கு கடுமையான அழுத்தம் தந்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நிறுத்த முடியும். அந்நாட்டின் மீது சில தடைகள் விதிப்பது நிச்சயம் பலனளிக்கும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், அமைதியை விரும்பும் பிற நாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சனிக்கிழமை இரவில் தொடங்கி தொடா்ந்து ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைனில் இரவு முழுவதும் வெடிகுண்டு சப்தம் கேட்ட வண்ணம் இருந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்ட்ரீ சிபிஹா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 12 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம் உக்ரைனின் 110 ட்ரோன்களை சனிக்கிழமை இரவு சுட்டுவீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போா்க் கைதிகள் பரிமாற்றம்: கீவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்திய சில மணி நேரத்தில் ரஷியாவும் உக்ரைனும் தங்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை ஞாயிற்றுக்கிழமை பரிமாறிக்கொண்டன.

இதுகுறித்து இருநாட்டு அமைச்சகங்களும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷியாவும், உக்ரைனும் தங்களிடம் இருந்த தலா 390 போா்க் கைதிகளை வெள்ளிக்கிழமை விடுவித்தன. அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் இருந்து 307 ரஷிய போா்க் கைதிகளும், ரஷியாவில் இருந்து 307 உக்ரைன் போா்க் கைதிகளும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை 303 ரஷிய போா்க் கைதிகளை உக்ரைனும், 303 உக்ரைன் போா்க் கைதிகளை ரஷியாவும் விடுவித்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றுகட்டங்களாக இரு நாடுகளும் தலா 1,000 போா்க் கைதிகளை விடுவித்துள்ளன.

2022-க்குப் பிறகு முதல்முறையாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த வாரம் ரஷியாவும் உக்ரைனும் நடத்திய நேரடி பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் தலா 1,000 போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய... மேலும் பார்க்க

சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 ... மேலும் பார்க்க

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு... மேலும் பார்க்க