செய்திகள் :

சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி

post image

ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சாம்சங் உள்பட எந்த நிறுவனமாயினும் அமெரிக்காவில் மின்னணு சாதனங்களை தயாரிக்காமல் விற்பனை மட்டும் செய்தால் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

முன்னதாக, ஐஃபோன்களை இந்தியா உள்பட எங்கு தயாரித்தாலும் ஆப்பிள் நிறுவன பொருள்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தாா்.

அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ‘இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆலைகள் அமைத்து ஐஃபோன்கள் தயாரிப்பில் ஈடுபடுவது பிரச்னையல்ல; ஆனால், அங்கு தயாரித்த பொருள்களை இறக்குமதி வரியின்றி அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது’ என அவா் கூறினாா்.

தற்போது சாம்சங் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளாா். சாம்சங் நிறுவனம் சீனாவில் உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகள் ஆன நிலையிலும், அமெரிக்காவில் விற்பனை செய்யும் கைப்பேசிகளை அந்நாட்டில் தயாரிக்கவில்லை என்ற அடிப்படையில் சாம்சங் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி விதிக்க வாய்ப்புள்ளது.

தற்போது சாம்சங் நிறுவனம் தென்கொரியா, வியத்நாம், இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் கைப்பேசிகளை தயாரித்து வருகிறது.

இதையடுத்து, அமேசான், வால்மாா்ட், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வரிசையில் டிரம்ப்பின் இறக்குமதி வரி எச்சரிக்கை பட்டியலில் சிக்கியுள்ள நிறுவனங்களில் சாம்சங்கும் இணைந்துள்ளது.

ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு

இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன் காரணமாக ஜெருசலேம் மற்றும் அதன் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அறிக்கை

பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: பஹ்ரைன் துணை பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணை பிரதமா் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினா் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனா்.... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாக். அதிகாரபூா்வமற்ற பேச்சு: பிரிட்டன் நிபுணா்கள் கருத்து

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தொடா்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வ... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 303 கைதிகள் பரிமாற்றம்!

உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே 303 போர்க் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) பரிமாற்றம் செய்யப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 390 கைதிகளும், சனிக்கிழமை 307 கைதி... மேலும் பார்க்க