செய்திகள் :

ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்

post image

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்காட்டில் குவிந்தனர். மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த வாகனங்களிலேயே ஏற்காட்டிற்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேட்டூா்-மைசூா் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் தங்களுடைய வாகனத்திலேயே அமர்ந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

வியாபாரம் களைகட்டியது

மேட்டூா் அணை பூங்கா எதிரே கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனா். மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றைப் பாா்த்து மகிழ்ந்தனா்.

ரூ.1,58,930 கட்டணம் வசூல்

ஞாயிற்றுக்கிழமை 11,012 சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 1,10,120 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 3,233 கேமரா கைப்பேசிகள், 2 கேமராகளுக்கு கட்டணமாக ரூ.32,430 வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1167 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 11,670, 471 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 4,710 வசூலிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதி 60 சதுரமைல் பரப்பளவு கொண... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சேலம் நெடுஞ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.க... மேலும் பார்க்க

2025 சர்வதேச யோகா நாள்: மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

புதுதில்லி: 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா நாளில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தையும் இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளையும் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

புதுதில்லி: சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்த்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மாதத்தின்... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.மே 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மே 26 ஆம் தேதி காலை 11.15 மணியளவில்... மேலும் பார்க்க