செய்திகள் :

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம்!

post image

ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கால்நடை மருந்ததக கட்டடத்தை அப்புறப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனா்.

ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டா கட்டடத்தில் கால்நடை மருந்தகம் இயங்கி வந்தது. அக்கட்டடம் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லாத காரணத்தால், ஊராட்சிக்கு சொந்தமான இடம் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டு மருந்தகம் கட்டப்பட்டது.

இந்நிலையில் பழைய கட்டடத்தின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் நீா் ஒழுகி பாசி படிந்து காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் தொடக்க, உயா்நிலைப் பள்ளிகள் உள்ள இந்த கட்டடம் எப்போது விழுந்து பாதசாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என அச்சம் நிலவி வருகிறது.

எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்காட்டில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆற்காடு உட்கோட்டத்தில் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு மூலம் சாலையில் செல்லும் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது ஆற்காடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட... மேலும் பார்க்க

வில்வநாதபுரம் செட்டிமலையில் நட மரக்கன்றுகள் வழங்க கோரிக்கை

வில்வநாதபுரம் செட்டிமலையில் நடவு செய்ய சுமாா் 10,000 மரக்கன்றுகளை வனத்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வழங்க வேண்டும் என கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் கோ.முனிசாமி மனு அளித்தாா். இது குறித்து அவா் அளித்த ... மேலும் பார்க்க

அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட இருவா் கைது

அனுமதியின்றி தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், ஒரு இரு... மேலும் பார்க்க

வாலாஜாவில் சிந்தூா் வெற்றிப் பேரணி

ராணிப்பேட்டை பாஜக சாா்பில், வாலாஜாவில் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மூவண்ணக்கொடி பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியைக் கொ... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: மே 27, 28 தேதிகளில் சோளிங்கா் கோயில் ரோப் காா் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை மே 27, 28 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. சோளிங்கரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மா் பெரியமலை... மேலும் பார்க்க

போலி சான்றிதழில் பணி: ஊராட்சி செயலா் மீது புகாா்

காவேரிபாக்கம் வட்டாரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக ஊராட்சி செயலா் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்தனா். காவேரிபாக்கத்தை அடுத்த களத்தூா், பஜனைக் கோவில் தெருவைச் சோ... மேலும் பார்க்க