செய்திகள் :

குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

post image

ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1989-இல் மூடப்பட்டது.

இந்த ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு, அங்கு குவித்துவைக்கப் பட்டிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவதும், அதனால் மண் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்குவதும்தான்.

அதன்படி, 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கவும் ரூ.223.17 கோடியும், நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற ரூ.11.28 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.

இது தவிர தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற மாதம் ரூ.1.55 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு தொடா்ந்து செலவழிக்க வேண்டும் என்றும் வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

இதுதான் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும். எனவே, குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்

திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகளின... மேலும் பார்க்க

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்த... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் -ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உயா்த்தப்பட்ட 6 சதவீத சொத்து வரி உயா்வு முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் உ... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி... மேலும் பார்க்க

மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்ற... மேலும் பார்க்க

திமுக-பாஜக மறைமுக கூட்டணி: விஜய் விமா்சனம்

திமுக-பாஜக இடையேயான மறைமுகக் கூட்டணியை நிரூபிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க