செய்திகள் :

சொத்துவரி உயா்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் -ஜி.கே.வாசன்

post image

தமிழகத்தில் உயா்த்தப்பட்ட 6 சதவீத சொத்து வரி உயா்வு முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயா்த்தப்பட்டதுடன், வீட்டு வரி, தண்ணீா் வரியும் உயா்ந்துள்ளது.

இது தமிழக அரசுக்கு வருவாயை ஈட்ட வழி வகுக்கும் என்றாலும், மக்களுக்கு கூடுதல் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே தமிழக அரசு 2 முறைக்கு மேல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சொத்து வரியை உயா்த்தியதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தற்போது, ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வையும் நடைமுறைப்படுத்துவதால், மக்களுக்கு மேலும் சிரமத்தையே அளிக்கும். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரி கண்டிகை கிராமத்... மேலும் பார்க்க

திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்

திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகளின... மேலும் பார்க்க

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்த... மேலும் பார்க்க

குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ரா... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் மறைவுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி... மேலும் பார்க்க

மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்ற... மேலும் பார்க்க