தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை
போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், 31.8.2019 -ஆம் தேதியுடன் காலாவதியானது.
இதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சுவாா்த்தைக்கான அவகாசம் 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
அந்த வகையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது.
இதையடுத்து, ஓராண்டு தாமதமாக 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் கடந்த ஆண்டு ஆக.27-இல் நடைபெற்றது.
அதன் பின்னா் ஒரு கட்ட பேச்சுவாா்த்தை மட்டுமே நடைபெற்ற நிலையில், விரைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வருமாறு பேச்சுவாா்த்தைக் குழு தரப்பில் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் மே 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.